ரோஹித்தின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் யுவராஜ் சிங்கின் இந்த வார்த்தைகளா ?

Rohith-2
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் வரும் ஒன்பதாம் தேதி அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

pandya

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த உடன் 647 ரன்கள் குவித்துள்ளார். அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்திற்கான காரணத்தை பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக யுவராஜ் பார்ம் அவுட்டில் இருந்தார். ஆனால் அவர் 2011 உலகக் கோப்பையில் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் நான் சிறப்பாக ஆடவில்லை. அப்பொழுது நான் உலக கோப்பையில் எனது ஆட்டம் குறித்து சற்று யோசித்து கொண்டிருந்தேன்.

rohith

அப்போது யுவராஜ் என்னிடம் கூறியது ஒன்று தான். உன்னுடைய ஆட்டத்தைப் பற்றி நீ கவலைப்படாதே முக்கியமான நேரத்தில் உன்னால் சிறப்பாக ஆட முடியும் உன் மனநிலையை எப்போதும் மாற்றிக் கொள்ளாதே என்றார். கண்டிப்பாக உன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறினார்.

Rohith

நானும் அதை நினைத்து இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்று என்னுடைய மனநிலை மாற்றங்கள் இல்லாமல் நன்றாக ஆட வேண்டும் என்று ஒவ்வொரு போட்டிலும் களமிறங்குகிறேன் அதன் மூலம் என்னால் தொடர்ந்து ரன்களை குவித்து முடிகிறது என்று ரோஹித் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement