மீண்டும் பண்டை கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டி அசிங்கப்படுத்திய ரோஹித் – விவரம் இதோ

Pant-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Ind

- Advertisement -

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த போட்டியின் 33 ஆவது ஓவரின்போது ஹோல்டரை அடித்த பந்தினை கவர் திசையினை நோக்கி ஓடி சென்று பிடித்த பண்ட் ஈஸியான ரன்அவுட் வாய்ப்பை தவறிவிட்டார். பந்தினை எடுத்து விக்கெட் கீப்பர் திசையில் அடிப்பதற்கு பதிலாக எதிர்முனைக்கு த்ரோ அடித்தார். இதனை கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் பண்டை ஹிந்தியில் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Pant

ரோஹித் அவரை திட்டியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. பண்ட் இதுபோன்று சில தவறுகளை செய்யும்போது ரோஹித் திட்டுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் டி20 தொடரின் போதும் மைதானத்தில் பலமுறை பண்டை முகத்துக்கு நேராக திட்டியுள்ளார் ரோஹித். பண்ட் சில தவறுகளை செய்யும்போது அதனை புரியவைப்பதற்கு பதிலாக அடிக்கடி திட்டி வருகிறார் ரோஹித். இந்த விடயம் இணையத்தில் விடியோவாகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement