ரோஹித் டெஸ்ட் போட்டியில் ஓப்பனராக இருக்க முடியாது. ரோஹித்துக்கு உருவான புதிய சிக்கல் – காரணம் இவர்தான்

Rohith-1
- Advertisement -

இந்திய அணியில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா புதிய துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் துவக்கவீரர் இடம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் கேள்விக்குறியாகியுள்ளது. அது யாதெனில் சில மாதங்களுக்குமுன் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை பிரச்சினையால் தடைசெய்யப்பட்ட ப்ரித்வி ஷா மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதால் ரோகித்தின் இடம் தற்போது மீண்டும் சிக்கலாகி உள்ளது.

எனவே ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் நடப்பு தென் ஆப்பிரிக்கா தொடரில் அந்த அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் நிச்சயம் ஒரு சதம் அடித்தே ஆகவேண்டும்.
இல்லையென்றால் அவர் டெஸ்ட் போட்டிகளில் நீடிக்க வாய்ப்பு கிடையாது. ஏனெனில் ப்ரித்வி ஷா 20 வயது இளம் வீரர் ரோகித் சர்மா 32 வயது மூத்தவர் என்பதால் அணியின் நலன்கருதி ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

Shaw

மேலும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ரஹானே மற்றும் விஹாரி சிறப்பாக விளையாடிவருவதால் ரோஹித்துக்கு மிடில் ஆர்தரிலும் வாய்ப்பு கிடைப்பது என்பது கடினம் தான். எனவே வரும் தொடரில் ரோஹித் சாதித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement