இந்த விஷயத்துக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார். ரோஹித்தை வெளுத்து வாங்கும் – நெட்டிசன்கள்

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Rohith

- Advertisement -

ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் நேற்று முன்தினம் துவங்க இருந்த இந்த ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்பபடாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது நாளான நேற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதன் பின்னர் இந்திய வாரியத் தலைவர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியிலும் அவரே துவக்க வீரராக களமிறங்க இந்திய முடிவு செய்துள்ளது. அதன் பயிற்சிக்காக ரோஹித் தற்போது இந்த போட்டியில் பங்கேற்றார்.

Rohith-1

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை கண்ட இந்தி ரசிகர்கள் இவர் வேலைக்காக மாட்டார் போல என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement