உலகக்கோப்பையில் ஹார்டிக் பாண்டியா பந்து வீசுவாரா ? – கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

pandya
- Advertisement -

இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பந்து வீசாமல் அணியில் பேட்ஸ்மேனாக நீடித்து வருகிறார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டியா நிச்சயம் பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார்.

pandya 1

- Advertisement -

அவரது இந்த விவகாரம் தற்போது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பந்து வீசாமல் அணியில் நீடிப்பது கடினம் என்றும் நிச்சயம் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதும் இந்திய அணியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாண்டியாவின் பந்து வீச்சு குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பாண்டியா ஒரு பந்து கூட முடியவில்லை. மேலும் இந்த தொடரில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே எங்களது அணியில் விளையாடி வருகிறார். பாண்டியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை கூற வேண்டுமென்றால் இந்த தொடர் முழுவதுமே அவர் பந்து வீசாமல் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள், ட்ரைனர்கள், பிசியோ என அனைவரும் கவனித்து வருகின்றனர். மேலும் அவருடைய பந்து வீச்சிற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Pandya

இதுவரை அவர் பந்து வீசவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அவருடைய உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதினால் நிச்சயம் உலக கோப்பை தொடரின் போது அவரால் பந்துவீச முடியலாம். ஆனால் இது குறித்த தெளிவான முடிவை டாக்டர்கள் மற்றும் பிசியோ ஆகியோர் தான் கூறவேண்டும். என்னை பொறுத்தவரை பாண்டியா அடுத்த வாரத்திற்குள் பந்துவீசும் அளவிற்கு தயாராகி விடுவார் என்று கருதுவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நம்ப முடியாத வெற்றி. எங்களது சிறப்பான வெற்றிக்கு இவர்கள் 2 பேரே காரணம் – விராட் கோலி மகிழ்ச்சி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா 11 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அவரது இந்த பேட்டிங் தற்போது அவருக்கு சற்று அதிர்ப்தி அளித்திருக்கும். இருந்தாலும் அவர் ஒரு குவாலிட்டி பிளேயர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நிச்சயம் இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து அவர் வலிமையாக திரும்பி வருவார் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement