இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் துவக்கத்தில் அகர்வால், புஜாரா மற்றும் கோலி என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இருப்பினும் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா நேற்று மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி (117) சதம் அடித்தார். ரஹானே (83) தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 164 பந்துகளைச் சந்தித்த ரோகித் சர்மா 117 ரன்களில் குவித்து களத்தில் உள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா இன்று நிச்சயம் தனது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் ரோஹித்தின் இரட்டைசதத்தை கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.
ஏனெனில் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இரட்டை சதத்தை அடித்து உள்ளார். அதிலும் கடைசியாக அவர் இரட்டை சதமடித்து 22 மாதங்கள் ஆகின்றன இந்த காரணத்தினால் தற்போது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை அடிக்கும் அற்புதமான வாய்ப்பு ரோஹித்துக்கு கிடைத்துள்ளது. அதனை நிச்சயம் ரோகித் சர்மா செய்து காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.