இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளிலும் இடம்பெறவில்லை.
This is awesome from @ImRo45 when he randomly pulled out two of his loyal fans from the crowd in Jamaica???????? #TeamIndia ???????????? pic.twitter.com/PqRV1xtjgH
— BCCI (@BCCI) September 2, 2019
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது இருப்பினும் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 2 போட்டிகளிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றினார்கள். இந்த தொடர் முடிந்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா சந்தித்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த அவரது ரசிகர்களை கூப்பிட்டு தனியாக நடனமாட வைத்து அதை ரசித்து மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது பிசிசிஐயின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை இந்திய ரசிகர்கள் மற்றும் ரோஹித் ரசிகர்கள் என அனைவரும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.