பயிற்சி போட்டியில் டக் அவுட் ஆனதால் ரோஹித்தின் துவக்க வாய்ப்பு பறிபோனதா ? – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று முடிந்தது.

Rohith-1

- Advertisement -

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியிலும் அவரே துவக்க வீரராக களமிறங்க இந்திய முடிவு செய்துள்ளது. அதன் பயிற்சிக்காக ரோஹித் தற்போது இந்த போட்டியில் பங்கேற்றார். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த பயிற்சி போட்டியில் ரோகித் டக்அவுட் ஆனதன் மூலம் இந்த தொடரில் அவர் துவக்க வீரராக களம் இறங்க மாட்டார் என்று துவக்க வீரராக களமிறக்குவதில் உறுதியாக உள்ளது. ஏனெனில் பல ஆண்டுகளாக துவக்க வீரராக களமிறங்கி அனுபவம் உள்ள வீரராக ரோகித் திகழ்கிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை அவர் துவக்க வீரராக படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

இதன் காரணமாக டெஸ்ட் தொடரிலும் அவர் நிச்சயம் துவக்க வீரராக சாதிக்க முடியும் என்று அணி நிர்வாகத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இந்த நம்பிக்கையின் காரணமாக ரோகித் நிச்சயம் இந்த தொடரில் டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களம் காணுவார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement