- Advertisement -
ஐ.பி.எல்

Rohith Sharma : அரைசதத்தினை விமர்சனையாக கொண்டாடிய ரோஹித் சர்மா – காரணம் இதுதான்

நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மும்பை அணி பிளேஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி படுத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மாவும் திகழ்ந்தார் என்பது. குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரைசதம் அடித்ததும் அதனை தனது மகளுக்காக கொண்டாடுவதை குறிப்பிட்டு தனது பேட்டை மார்பில் வைத்து தாலாட்டினார்.

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 41 ரன்களும், லின் 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by