ஷர்துல் தாகூரின் நிச்சயதிற்கு நேரில் சென்று வாழ்த்திய பிரபல இந்திய அணி வீரர்

Mittali
- Advertisement -

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது விளையாடி வருபவர். இதுவரை இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று தனது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பேட்டிங்கிலும் அரை சதங்களும் அடித்து அசத்தியுள்ளார்.

அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனது நிச்சயதார்த்தத்தை முடித்த அவர் சில புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி இன்று நடைபெற்ற அவரது நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 75 பேர் மட்டுமே கலந்து கொண்டு இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் வரவேற்பு அறையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்திற்கு இந்திய அணியின் டி20 கேப்டனும், இந்திய அணியின் பிரபல முன்னணி சீனியர் வீரருமான ரோகித் சர்மா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஷர்துல் தாகூருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரோஹித் சர்மா : வாழ்த்துக்கள் ஷர்துல் ப்ரோ. உன்னுடைய புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். ரோகித் சர்மா பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement