டெஸ்ட் தொடருக்கான முதல் 2 போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 வீரர்கள் – பி.சி.சி.ஐ அதிரடி அறிவிப்பு

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. மேலும் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி அவரது மனைவி பிரசவத்திற்காக நாடு திரும்பி விடுவார். அதனால் மீதமுள்ள 3 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் காயத்திற்கான பயிற்சி எடுத்து வரும் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருக்கின்றனர்.

மேலும் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா சென்றால் 14 நாட்கள் குவாரண்டைன் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். அப்படி இருக்க முதல் போட்டியில் அவர்கள் பங்கேற்க வேண்டுமானால் டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவிற்கு டிசம்பர் 8-ஆம் தேதி புறப்படவே தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

Ishanth

அதேபோன்று டிசம்பர் 8 ஆம் தேதி புறப்பட்டால் 9ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை குவாரன்டைனில் இருக்க வேண்டும். இதனால் 2வது போட்டியிலும் அவரால் பங்கேற்பது கடினம் எனவே இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் ஆகியுள்ளது.

ishanth

மேலும் தற்போது பிசிசிஐ இவர்கள் இருவரையும் முதல் இரண்டு போட்டியில் இருந்து நீக்கியுள்ளது. அதுமட்டுமின்றி மீதமுள்ள போட்டிகளிலும் இவர்கள் பங்கேற்பது தற்போது சந்தேகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement