இவ்ளோ நாள் நல்லாதானே இருந்தீங்க. என்னாச்சு உங்களுக்கு ரோஹித்தை வறுத்தெடுத்த – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

Rohith-1
- Advertisement -

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இப்படி வீட்டிற்குள்ளேயே அவர்கள் இருப்பதால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர்.

Rohith

- Advertisement -

சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஒன்றாக நேரலை செய்தனர். இந்த நேரலையை பல லட்சக்கணக்கான இந்திய மக்கள் கண்டு ரசித்தனர். அப்போது இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது ஐபிஎல் அணிகள் மற்றும் மற்ற வீரர்களை பற்றியும் பேசினர்.

இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுவதால் இந்தியில் உரையாடிக் கொண்டனர்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஹிந்தியில் பேசுவது எங்களுக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம். டிவியில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசலாம். நான் இங்கு ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று ரசிகரை அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்தி தெரியாத தென்னிந்தியர்களுக்கு அவர் பேசுவது எப்படி புரியும் என சர்ச்சைகள் தற்போது உருவாகியுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக தென்னிந்தியாவில் சுமூகமற்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் ரோஹித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இந்த செயல் மற்ற மொழி பேசும் ரசிகர்களை இழிவு படுத்துவது போன்று உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Rohith-1

இவ்வளவு நாள் ரசிகர்களிடம் எடுத்திருந்த நல்லபெயரை சற்று டேமேஜ் செய்யும் விதமாக அவர் செய்த செயல் தற்போது எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement