இன்றைய போட்டி துவங்கும் முன்னரே சாதனை படைத்த ரோஹித் அகர்வால் ஜோடி – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Agarwal

- Advertisement -

அதன்படி துவக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வினோதமான சாதனை ஒன்றை படைத்துள்ளனர். அது யாதெனில் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக கலங்காத வீரர்கள் இருவர் துவக்க வீரராக களமிறங்குவது 47 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை.

இதற்கு முன்னதாக 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கவாஸ்கர் மற்றும் ராம்நாத் பர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக புதிதாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போதுதான் புதிய வீரர்கள் இருவர் துவக்க வீரராக ஒன்றிணைந்து களமிறங்கி விளையாடுகின்றனர்.

Rohith 1

தற்போது வரை இந்திய அணி 37 ஓவர்களில் 112 ரன்களை குவித்துள்ளது. ரோகித் மற்றும் அகர்வால் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement