இந்திய அணியின் மோசமான விளையாட்டு..! ரோஹித் வெளியிட்ட உருக்கமான பதிவு.

ro
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா ட்விட்டரில் நேற்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி)இந்திய அணியை பற்றி ட்வீட் செய்துள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார் ஒரு நாள் போட்டியில் அதிகபச்ச ரன் 264 குவித்த பெருமையும் இவருக்கு உண்டு.அது மட்டும் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்து அசதி உள்ளார்.

RohitSharma

இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தொடரில் விளையாடி வருகிறது முதல் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து இந்திய அணியினை பலரும் விமர்சித்து வருகின்றனர்.தற்போது அது குறித்து ரோஹித் சர்மா இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணி என்பதை அனைவரும் மறந்து விடாதீர்கள் தற்போது உள்ள வீரர்களுடன் தன இந்திய அணி முதல் இடத்திற்கு வந்தது ஆகையால் ஒரு போட்டியில் அடைந்த தோல்வியை வைத்து அணியை விமர்சிக்காதீர்கள்

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இது நமது அணி இது போன்ற கடினமான சூழ்நிலையில் நாம் தான் அணிக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1479 ரன்களை குவித்துள்ளார் அதிகபட்சமாக 177 ரன் குவித்துள்ளார்.தற்போதுள்ள இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன

ரோஹித் சர்மாவின் இந்த ட்வீட்டிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் இந்திய அணி இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு மீண்டும் சிறந்த வெற்றிகளை குவிக்கும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.ரோஹித் சர்மாவின் இந்த ட்வீட் இப்போது வைரலாகி உள்ளது.

Advertisement