அற்புதமாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்க்கு ரோகித்சர்மா பாராட்டு – என்னனு பாராட்டினார் தெரியுமா

washington
- Advertisement -

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்தியா – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற போட்டி நேற்று நடைபெற்றது.நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 17ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆரம்பம் முதலே இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்தியஅணியின் கை மேலோங்கியே உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் டாஸ்வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.முதலில் விளையாடிய இந்திய அணி 20ஓவர்களின் முடிவில் 170 ரன்களை எடுத்தது.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணிவீரர்கள் ஆரம்பம் முதலே ஒருபக்கம் தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மற்றொருபுறம் இந்திய அணி பவுலர்களான சிராஜ் மற்றும் ஷர்துல் தக்கர் பந்துகளை விளாசி தள்ளினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிறப்பாக செயல்பட்டார். 4ஓவர்களை வீசிய வாஷிங்டன் சுந்தர் 23 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 3விக்கெட்டுகளை சாய்த்தார்.

sunder

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபின்னர் பேசிய ரோகித்சர்மா “நேற்றைய போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். அவரது பந்துவீச்சு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. ரெய்னாவும் மிகச்சிறப்பாக ஆட்டத்தின் போக்கை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டார்.ஒரு கட்டத்தில் பந்துவீசி சோர்ந்துபோன சிராஜை அழைத்து நீ கவலைப்படாதே அவர்களை கட்டுப்படுத்திவிடலாம் என்று ஆறுதல் கூறினேன். சிராஜ் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வரும்காலங்களில் வலம்வருவார் என்றும் தெரிவித்தார்.

Advertisement