இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பழக்கமுடையவர்கள். குறிப்பாக ஒவ்வொரு தொடரின் முடிவில் இந்திய அணி வெற்றி பெறும் வேளையில் புகைப்படங்களை பதிவிடும் அவர்கள் அதை தவிர்த்து தாங்கள் வெளியில் சுற்றுலா செல்வது குடும்பத்தில் நடக்கும் விடயங்கள் மற்றும் அவரவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் சில கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சமூகவலைதளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஆனால் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்.
இந்திய அணி வெற்றி பெறும் போதோ அல்லது வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டுமோ தான் அவர்களை பாராட்டி ரோஹித் சர்மா ஒரு சில கருத்துக்களை பதிவிடுவார். ஆனால் ரோஹித் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில பதிவுகள் இணையத்தில் வைரலாக அதோடு அவரது சில வினோதமான பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.
ஏனெனில் நேற்றைய தினம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பல வினோதமான கருத்துக்கள் வெளியாகின. அதில் குறிப்பிடப் பட்டவை : நான் எப்போதும் காயின் டாசை விரும்புகிறேன் அது என்னுடைய வயிற்றில் விழும் போது என்று ஒரு பதிவு இருந்தது. அதனை தொடர்ந்து தேனீக்கள் நல்ல பாக்ஸிங் பேக்குகளை உருவாக்கும் என்று ஒரு பதிவு இருந்தது. அதே போன்று கிரிக்கெட் பந்துகளை சாப்பிட முடியும் சரிதானே என்பது போன்ற சில வினோதமான பதிவுகள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகின.
இந்த பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலேயே வைரலாக அவரது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் எப்போதுமே ட்விட்டர் பக்கத்தை தனது ஐபோன் மூலம் கையாளும் ரோகித் தற்போது வேறு ஒரு இடத்தில் இருந்து பதிவிடப்பட்டது போல் காண்பிக்கப்பட்டால் நிச்சயம் இது ஹேக்கர்களால் நடைபெற்ற சம்பவம் என்பது உறுதியானது.
இதையும் படிங்க : இலங்கை டெஸ்ட் தொடரில் கபில் தேவ் ஆல்டைம் சாதனையை உடைக்கபோகும் ரவிச்சந்திரன் அஷ்வின் – என்ன தெரியுமா?
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு பிறகு இது குறித்து ரோகித் சர்மா வெளியிட்டுள்ள பதிவில் : எனது ட்விட்டர் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு விட்டது மன்னித்துவிடுங்கள் இதை மீட்டெடுக்க சிறிது நேரம் பிடித்தது என்று ரோஹித் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.