IND vs WI : அவங்களோட பவருக்கு இது போதாது. வெற்றிக்கு பிறகும் வெ.இ வீரர்களை புகழ்ந்த – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்தனர்.

IND vs WI T20I

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஆவேஷ் கான், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :

Arshdeep Singh

இந்த மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை. இருப்பினும் எங்களது அணியின் வீரர்கள் பேட்டிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நான் இந்த போட்டியில் 190 ரன்களை குவித்த போதும் அது வெற்றிக்கு போதுமான பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்று நினைத்தேன்.

- Advertisement -

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள பலமான பேட்டிங் ஆர்டருக்கு எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது. இருந்தாலும் இன்றைய போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை கட்டுப்படுத்தினர்.

இதையும் படிங்க : சிறப்பாக செயல்பட்டும் டி20 உலககோப்பையில் வாய்ப்பை இழக்கப்போகும் 4 இந்திய வீரர்களின் பட்டியல்

இறுதியில் நாங்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement