அதிரடி சிக்சர்கள்.. தரமான ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட்டை தெறிக்க விட்ட ஹிட்மேன்.. பவர்ப்ளேவில் 13 வருடத்துக்கு பின் சாதனை

Rohit Sharma Six
- Advertisement -

இந்தியா மற்றும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்றது. அதில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 352/7 ரன்கள் எடுத்தது.

குறிப்பாக ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் அதிரடியாக விளையாடிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 94, ஸ்டீவ் ஸ்மித் 74, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் குவிக்க உதவினர். இருப்பினும் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

அசத்திய ரோஹித் சர்மா:
அதை தொடர்ந்து 353 ரன்களை துரத்திய கில், இஷான் கிசான் ஆகியோர் ஓய்வெடுப்பதால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அதில் வாசிங்டன் சுந்தர் தடுமாற்றமாகவே செயல்பட்டு நிலையில் மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஸ்டைலில் விளையாடிய ரோகித் சர்மா உலகிலேயே மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் மிட்சேல் ஸ்டார்க்கு எதிராக 2 சிக்சரை அடித்து அமர்க்களப்படுத்தினார்.

அத்துடன் ஹேசல்வுட்க்கு எதிராக தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த அவர் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ்க்கு எதிராக 2 சிக்ஸர்களை அடித்து மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவாகவே ஸ்டார்க், ஹேசல்வுட், கமின்ஸ் ஆகிய 3 வீரர்களை கொண்டிருப்பதால் ஆஸ்திரேலியா உலகிலேயே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு அட்டாக்கை கொண்ட அணியாக வல்லுனர்களாலும் முன்னாள் வீரர்களாலும் போற்றப்படுகிறது.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட அந்த 3 தரமான பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட்க்கு ஆகிய மூவருக்கு எதிராகவும் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் 10 ஓவர்களுக்குள் 31 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 13 வருடங்கள் கழித்து பவர் பிளே ஓவர்களிலேயே அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

கடைசியாக கடந்த 2010இல் நியூசிலாந்துக்கு எதிராக கம்பீர் 51 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அப்படி அதிரடியாக விளையாடிய ரோகித் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81 (58) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 56 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் சற்று முன் வரை போட்டியில் இந்தியா 32 ஓவரில் 203/3 என்ற நிலையில் போராடி வருகிறது.

Advertisement