ஃபாலோ ஆன் பெற்ற தனது அணியை தூக்கிய ரியன் பராக்.. ரிஷப் பண்ட்க்கு பின் சாதனை

Riyan Parag 2
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் போராடி 327 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்த நிலையில் அசாம் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்பம் முதலே சட்டீஸ்கர் பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

- Advertisement -

ரியான் பராக்கின் சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேனிஷ் டாஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் சட்டீஸ்கர் சார்பில் அதிகபட்சமாக சௌரப் மஜும்தார் மற்றும் ரவி கிரண் விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அந்த நிலைமையில் 4வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியல் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதே வேகத்தில் அதிரடியாக செயல்பட்ட அவர் வெறும் 56 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற அபாரமான சாதனையும் படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அதிவேகமாக அரை சதமடித்த வீரராக இப்போதும் சாதனை படைத்துள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் சதமடித்து 11 பவுண்டரி 12 சிக்ஸருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.

இதையும் படிங்க: கணுக்கால் காயம் மட்டுமல்ல.. மேலும் ஒரு பாதிப்பை சந்தித்துள்ள சூரியகுமார் – ஐ.பி.எல் போட்டிகளையும் தவறவிட வாய்ப்பு

ஆனால் அவரை தவிர்த்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி அசாமை 254 ரன்களுக்கு மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

Advertisement