இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சை தற்போது முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களை குவித்தனர்.
இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபகாலமாகவே பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வரும் ரிஷப் பண்ட் பின் அசத்தலான செயல் இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது.
குறிப்பாக பந்துவீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் முன்னரும் இந்த இங்கிலாந்து வீரர்களை கேலி செய்யுமாறும், இந்திய பந்துவீச்சாளர்களை ஊக்குவிக்குமாறு அவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். இது பெருமளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த போட்டியில் அவர் அக்சர் பட்டேல் வீசிய ஒரு ஓவரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனை அவர் ஜாலியாக கிண்டல் செய்தார்.
Pant – “Someone is getting angry, Someone is getting angry”
Next ball crawley just threw is wicket😂#INDvsENG #RishabhPant pic.twitter.com/Q1QBtJksuO— Trollmama_ (@Trollmama3) March 4, 2021
அதன்படி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லியை கேலி செய்த அவர் “Some on Getting Angry”, “Some on Getting Angry” என்று கத்தினார். அதாவது யாரோ ஒருவர் கோபமாக இருக்கிறார். நீ பந்துவீசு என்பது போலக் கத்திக் கொண்டே இருக்க அக்சர் படேலின் அடுத்த பந்திலேயே பேட்ஸ்மேன் நிதானமிழந்து பந்தை தூக்கி அடித்தார்.
இதன் காரணமாக சிராஜிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முதல் நாள் இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழக்க ஆட்டநேர முடிவில் இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 24 ரன்களுடன் உள்ளது. ரோஹித் சர்மா 8 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.