- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பந்து போறது எங்க ? இவரு ஓடுறது எங்க ? மீண்டும் ஒருமுறை காமெடி செய்த ரிஷப் பண்ட் – வைரலாகும் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்திலும் ரிஷப் பண்டின் மோசமான விக்கெட் கீப்பிங் தொடர்ந்தது என்றே கூறலாம். பொதுவாகவே பேட்டிங்கில் அசத்தி வரும் பண்ட் விக்கெட் கீப்பிங் இல் ரிஷப் பண்ட் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது கேட்ச்களை தவற விடும் பொழுது ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் செய்த ஒரு மோசமான செயல்பாடு சற்று நகைச்சுவையாக அமைந்தது. அது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய போட்டியில் போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கையில் 151வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார்.

போப் அந்த பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்து பேட்டில் பட்டு டாப் எட்ஜ் ஆகி மேலே விக்கெட் கீப்பர் இன் பின்னர் பறந்தது. ஆனால் பந்து தனக்கு முன்னால் விழுவதாக நினைத்து ரிஷப் பண்ட் முன் நோக்கி ஓடிவந்தார். ஆனால் பந்து கீப்பருக்கு பின்னால் சென்றது. அதனை லெக் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோகித்சர்மா ஓடிச்சென்று பிடித்தார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அவரை கேலியான விக்கெட் கீப்பராக பார்க்க வைத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 555 ரன்களை குவித்து உள்ள இங்கிலாந்து அணி விரைவில் ஆட்டமிழந்து நாளை இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by