மீண்டும் அலட்சியமாக விளையாடி இந்திய அணியை குழியில் தள்ளிய இளம்வீரர் – ரசிகர்கள் அதிருப்தி

Pant
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியருந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது கடந்த 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய இளம் வீரர் ஒருவர் தன்னுடைய அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார் என்றும் அவருடைய ஆட்டம்தான் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் கருத்து கூறியிருந்த முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர்.

IND

- Advertisement -

அவர்கள் குறிப்பிட்ட அந்த வீரர் இந்த இறுதிப் போட்டியில் மீண்டும் தனது அலட்சியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை தன்னுடைய பொறுப்பற்ற பேட்டிங்கினால் ரசிகர்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட், அந்த ஆஸ்திரேலிய தொடரில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய அணியானது பேட்டிங்கில் தடுமாறும் போதெல்லாம் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரசிகர்கள் மற்றும் தேர்வுக் குழுவின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர்,

இந்த இறுதிப் போட்டியிலும் அந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான சூழ்நிலை அவருக்கு அமைந்தபோதும் அதைச் செய்யாமல் தனது அலட்சியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டாகி சென்றிருக்கிறார் ரிஷப் பன்ட். நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி அவுட்டானதும் களத்திற்குள் வந்த ரிஷப் பன்ட்,

Pant

துணைக் கேப்டனான ரஹானேவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியருக்க வேண்டிய நிலையில், கைல் ஜேமிசன் வீசிய அவுட் சைட் பந்தில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

Pant

ஏற்கனவே விராட் கோஹ்லியின் விக்கெட்டை இழந்திருந்த நிலையில் அடுத்து வந்த ரிஷப் பன்ட்டும் விரைவிலேயே தனது விக்கெட்டை இழந்தது, இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டியில் தேவையே இல்லாத ஷாட் ஆடி, தனது அலட்சியாமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் ரிஷப் பன்ட், மீண்டும் தனது செயல்பாட்டால் விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

Advertisement