1732 ரன்ஸ்.. தோனியை முந்திய ரிஷப் பண்ட் சேனா நாடுகளில் நாயகனாக புதிய சாதனை.. இந்தியா அபாரம்

- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் 359/3 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அபாரமாக விளையாடிய 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் இங்கிலாந்து பவுலர்களை அபாரமாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 100 ரன்கள் விளாசினர்.

- Advertisement -

தோனியை முந்திய பண்ட்:

அதன் வாயிலாக லீட்ஸ் மைதானத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.. அடுத்ததாக கேப்டன் சுப்மன் கில் – துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதில் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த கில் வெளிநாடுகளில் அசத்தவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து 127* ரன்கள் எடுத்துள்ளார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதத்தை அடித்து 65* ரன்கள் குவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாட்டு மண்ணில் சதத்தை அடித்த முதல் இந்திய மற்றும் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இன்னும் நியூசிலாந்து மண்ணில் மட்டும் அவர் சதத்தை அடிக்கவில்லை.

- Advertisement -

சேனா நாயகன்:

இருப்பினும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் ரிசப் பண்ட் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 1732 ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரிஷப் பண்ட் (இந்தியா): 1732*
2. எம்எஸ் தோனி (இந்தியா): 1731
3. ஃபரூக் என்ஜினீயர் (இந்தியா): 1099
4. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்): 850
5. தினேஷ் சந்திமல் (இலங்கை): 831

இதையும் படிங்க: என்னப்பா இப்படி வெளுக்குற? 2 சம்பவம் செய்த ரிஷப் பண்ட்.. சிரித்த ஸ்டோக்ஸ், கும்பிட்டு வரவேற்ற ராகுல்

இதிலிருந்து சேனா நாடுகளில் ஆசியக் கண்டத்தின் நாயகன் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட சிறந்த கீப்பர் என்பதை மீண்டும் அவர் ஒருமுறை காண்பித்துள்ளார். இதே வேகத்தில் இந்தப் போட்டியில் அவர் சதத்தை அடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement