இந்தியா எப்படியாவது கோலியை கழற்றி விடப்பாக்குறாங்க.. ஆனா அவர் தான் அதை செய்யனும்.. பாண்டிங்

Ricky Ponting
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கி நடைபெற உள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி பெரிய விவாதங்களுக்கு மத்தியில் தேர்வானார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி நங்கூரமாக நின்று கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யும் ஸ்டைலை கொண்டுள்ளார்.

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்கள் ஸ்லோவாக இருக்கும். எனவே அதில் நங்கூரமாக விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகு முறை பொருந்தாது என்பதால் அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் காணப்பட்டன. இருப்பினும் ஏற்கனவே உலகின் அனைத்து மைதானங்களிலும் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ள காரணத்தால் விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

பாண்டிங் பதிலடி:
இந்நிலையில் இந்தியாவில் வேண்டுமென்றே ஏதேனும் காரணத்தை சொல்லி விராட் கோலியை கழற்றி விடுவதற்கு பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி போன்ற தரமான வீரர் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக் குழுவினர் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஜெய்ஸ்வாலை ஓப்பங்கினில் களமிறக்கும் முடிவையும் எடுத்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவுடன் அவர்கள் விராட் கோலியை ஓப்பனிங்கில் விளையாட வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி பற்றி ஒரு வேடிக்கையான விஷயம் உள்ளது”

- Advertisement -

“இந்தியாவில் உள்ள மக்கள் எப்போதும் அவரை கழற்றி விடுவதற்காக ஒரு காரணத்தை தேடுகின்றனர். ஆனால் என்னை பொறுத்த வரை அவர் தான் இந்தியா தேர்வு செய்வதற்கான முதல் வீரர். அவர் டாப் ஆர்டரில் தன்னுடைய வேலையை செய்வார். அவரைச் சுற்றி நீங்கள் சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர்கள் அவர்களுடைய வழியில் விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: ஆர்சிபி ஃபைனல் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க.. கொல்கத்தாவை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்

“ஐசிசி இணையத்தில் இது மட்டுமல்லாமல் இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பற்றி நான் ஏற்கனவே சில உரையாடல்களை பேசியுள்ளேன். பெரிய போட்டிகள் வரும் போது அவரை போன்ற வீரர்கள் தான் வேலையை செய்து முடிக்கக் கூடியவர்கள். கிளாஸ் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உங்களால் எதையும் வைத்து மாற்ற முடியாது” என்று கூறினார்.

Advertisement