தெ.ஆ அணிக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் மற்றும் சாஹல் இடம்பெறாததன் காரணம் இதுதான் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

chahal
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

Krunal

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் சுழற்பந்துவீச்சு ஜோடியான குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

அதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இந்திய அணியில் நாங்கள் நிறைய ஸ்பின்னர்களை அணியில் வளர்க்க முடிவு எடுத்துள்ளோம். அதன்படி க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் கடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

Sundar

எனவே அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் காரணமாகவே குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கவில்லை மேலும் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருவதால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அணியில் தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் இருவருக்கும் வாய்ப்பளிக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறோம் என்று பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement