Ambati Rayudu : உ.கோ அணியில் தேர்வாகாத விரக்தியில் விஜய் ஷங்கரை பங்கமாக கலாய்த்த ராயுடு – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Rayudu
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு ராயுடுவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ராயுடு எதிர்பார்த்த அளவு தனது திறமையை நிரூபிக்க தவறினார். ஆனால், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே தன் திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது இந்திய அணியில் தேர்வாகாத விரக்தியில் அம்பத்தி ராயுடு உள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்றே முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று சர்வதேச போட்டிகளில் மட்டும் ராயுடு ஆடிவந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ராயுடுவின் செயல்பாடு திருப்தி இல்லாத காரணத்தால் அவரை கழட்டிவிட்டு முப்பரிமாணத்தில் சிறப்பாக செயல்படும் வீரரான விஜய் ஷங்கரை தேர்வு செய்தது.

- Advertisement -

Vijay Shankar

ராயுடுவின் இந்த விரக்தியை மறைமுகமாக விஜய் ஷங்கர் மீது வெளிக்காட்டி உள்ளார். ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டவை : நான் உலகக்கோப்பை போட்டிகளை காண புதிதாக 3D கண்ணாடியை ஆர்டர் செய்து இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு அர்த்தம் என்ன என்றால் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றிலுமே சிறந்தவர் என்று தானே விஜய் ஷங்கர் அணியில் தேர்வாகி உள்ளார்.

பார்க்கத்தானே போகிறேன் உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர் என்ன செய்யப்போகிறார் ? என்பது போன்று மறைமுகமாக தனது பதிவினை பதிவிட்டுள்ளார் ராயுடு.

Advertisement