யோயோ பயிற்சியில் தவறிய ராயுடு.! இந்திய அணியில் விளையாடுவரா..!

ambathirayudu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் தொடர்ந்து பல தொடர்களில் விளையாட உள்ளது. அந்த தொடர்களில் விளையாடும் வீரகர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ‘யோ யோ’ டெஸ்ட் என்ற பிட்னெஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் தேர்வாகவும் வீரர்களை மட்டுமே விளையாட்டு தொடர்களில் விளையாட இந்துய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணி அதிரடி ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு தோல்வியடைந்துளர்.

ambathirayudu1

- Advertisement -

இந்திய அணி வரும் மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் அவர்கள் அனைவருக்கும் யோ யோ எனப்படும் பிட்னஸ் டெஸ்ட் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று (ஜூன்15) முடிந்த இந்த டெஸ்டில், இந்திய வீரர்களான தோனி, கோலி , ரெய்னா உள்ளிட்டோர் தகுதி பெற்றனர்.

ஆனால், இந்த தேர்வில் இந்திய அணியில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இடம் பிடித்த ராயடு நிர்ணயிக்கப்பட்ட 16.3 புள்ளிகளாக எடுக்க முடியாமல் தோல்வியடைந்தார். இதனால் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ள இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடு பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளர்.ஏற்கனவே இந்த தேர்வில் இந்திய அணியின் மொஹெமத் சமியும் தோல்வியடிந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

rayudu

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வந்த ராயுடு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அந்த தொடருக்கு பின்னர் இவர்க்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்தும், அந்த வாய்ப்பு அவரின் கை நழுவி சென்றுள்ளது சற்று சோகமான விடயம் தான்.

Advertisement