சி.எஸ்.கே அணியும், லக்ஷ்மனனும் தான் எனக்குள் இந்த மாற்றைத்தை ஏற்படுத்தினார்கள் – மனம் திறந்த ராயுடு

Rayudu
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில் உலக கோப்பை தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

- Advertisement -

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி வி பார்த்தசாரதி கோப்பையில் விளையாட வந்த ராயுடு தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டார். ஓய்வு முடிவை ஏமாற்றத்தினால் எடுத்தேன் ஆனால் தற்போது இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பி உள்ள மெயிலில் நான் ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன். செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் ஹைதராபாத் அணியில் இணைய ரெடியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Rayudu

மேலும் கடினமான நேரத்தில் என் மனதை மாற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் ஆகியோருக்கு நன்றி. அவர்களே எனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வைத்தார்கள். சிஎஸ்கே ரசிகர்கள் பெருமளவு என் மனதை தேற்றி என்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட மீட்டு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement