சமீபத்தில் ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார் – விவரம் இதோ

Rayudu
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் இந்திய அணியின் நான்காம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார்.

- Advertisement -

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த உலக கோப்பை தொடரில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அவரது வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக விரக்தி அடைந்தார் அம்பத்தி ராயுடு.

உலக கோப்பை தொடருக்கு தன்னை தேர்வு செய்யாததால் வெளிப்படையாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியையும் மேலும் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார். இதனை அடுத்து தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ராயுடு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்ற தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

rayudu

மீண்டும் நான் தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறேன். இந்த தொடர் வரும் 19-ம் தேதி முதல் சென்னையில் துவங்குகிறது என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் விளையாட உள்ளது சாத்தியமாகியுள்ளது. அதனை தொடர்ந்து மேலும் வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement