கண்ணீர் விட்டு அழுதப்போ.. தோனி மாதிரி சுயநலமின்றி ரோஹித் ஹெல்ப் பண்ணாரு.. அஸ்வின் உருக்கமான பாராட்டு

Ravichandran Ashwin 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2வது போட்டியில் 500வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு சென்று அம்மாவை பார்த்த அஸ்வின் உடனடியாக அர்ப்பணிப்புடன் இந்திய அணிக்கு திரும்பி எஞ்சிய தொடர் முழுவதும் விளையாடி வெற்றிகளில் மீது பங்காற்றினார்.

இந்நிலையில் அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அம்மாவுக்கு உடல்நிலை மோசமானதாக மனைவி சொன்னதும் கண்ணீர் விட்டு அழுததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அப்போது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உடனடியாக வீட்டுக்கு சென்று அம்மாவை பார்ப்பதற்காக தனி விமானத்தை வர வைத்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் நெகிழ்ச்சி:
மேலும் தோனியை போல் கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவும் மனதை கொண்டுள்ளதாகவும் பாராட்டும் அஸ்வின் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நான் அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். அப்போது அவர் பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை”

“அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள். ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்யும் என்றார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்”

- Advertisement -

“ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோஹித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்”

“ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது. அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்”

இதையும் படிங்க: 

“தோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள். கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன். தோனியும் அதை செய்வார். ஆனால் ரோகித் அதை 10 மடங்கு அதிகமாக செய்கிறார்” என்று கூறினார்.

Advertisement