இந்திய அணியில் இவர் ஒரு மேட்ச் வின்னர். அதனால் தான் வெளிநாட்டு போட்டிகளில் இறக்குறோம் – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

pant-1

- Advertisement -

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சாஹாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற இவர் இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட ஆறு இன்னிங்சில் 29,0*, 36,97, 23, 89 ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் பண்ட்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கீப்பிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல கேட்ச்சுகளை தவற விட்டதன் காரணமாக பண்ட் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ரவிசாஸ்திரி பேசுகையில் :

Pant

“ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரர் ஆவார். இவர் மேட்ச் வின்னரும் கூட. ரிஷப் பண்ட் மேட்ச் வின்னர் என்பதால்தான் அவரை அனைத்து வெளிநாட்டு போட்டிகளிலும் விளையாட வைத்து வருகிறோம். அவரது விக்கெட் கீப்பிங் சரியில்லை என்றாலும் அவரது பேட்டிங் அதிரடியாக இருக்கிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் சிறிது நேரம் அவர் விளையாடி இருந்தால் போட்டியை வெற்றி பெற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

pant

அவர் ஒரு மிகச் சிறந்த வீரர் என்பதால்தான் அவரை அணியில் தேர்வு செய்கிறோம்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement