சிங்கத்தை அதன் குகையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. சிங்கம் என்று ரவி சாஸ்திரி கூறியது யார்னு தெரிஞ்சா குஷி ஆய்டுவீங்க

Shastri
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த ராஞ்சி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பித்த நாளிலிருந்து தோனி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்று நாட்களாக வராத தோனி இன்று நான்காம் நாள் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு வந்தார். மேலும் ஓய்வு அறையில் இந்திய வீரர்களை சந்தித்த தோனி உள்ளூர் வீரரான நதீம்முக்கு ஆலோசனையும் வழங்கினார் .அதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தோனியை சந்தித்துள்ளார் மேலும் தோனியுடனான அந்த சந்திப்பை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரவிசாஸ்திரி உண்மையான இந்திய லெஜெண்ட்-யை அதன் குகையில் பார்த்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடர் வெற்றிக்கு பின் எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement