நாளைக்கு ஒயின்ஷாப் ஓபன். இவங்க 2 பேரையும் கூட்டிட்டு போயி பியர் குடிக்கப்போறேன் – ரவி சாஸ்திரி வெளிப்படை

Ravi-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக இருந்தவர் ரவிசாஸ்திரி கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அதில் முக்கியமான வீரராக இருந்தவர். மேலும் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக மாறினார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து விராட் கோலியின் தலைமையில் இருக்கும் இந்திய அணிக்கு அவரது சிபாரிசில் தற்போது பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

Ravi

- Advertisement -

எப்போதும் இந்திய அணி வெற்றி வரும் போதெல்லாம் அதுகுறித்து அதனை என்ஜாய் செய்பவராக இருக்கிறார் ரவிசாஸ்திரி. அவ்வப்போது கிரிக்கெட் மைதானத்தில் இவரை பீர் பாட்டிலுடன் நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் தான் யாருடன் மது அருந்துவார் எனவும், யாருடன் அருந்துவது பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் :

தற்போது ஊரடங்கு நிலையில் அனைவரும் உள்ளோம். முன்பு நான் இருந்த இடம் சிவப்பு மண்டலத்தில் இருந்தது, தற்போது ஆரஞ்சு மண்டலமாக அது மாற்றப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மதுக் கடைகள் திறக்கப்படும். மேலும் இன்று இரவே நான் சென்று பீர் வாங்குவேன்.
மேலும் மது அருந்த செல்லும் போது எனது இரண்டு நண்பர்களை கூட்டி செல்வேன்.

ravi

அவர்கள் ரோஜர் பின்னி மற்றும் லட்சுமன் சிவராம கிருஷ்ணன் ஆகிய இருவர்தான் அவர்கள். இதில் லட்சுமன் சிவராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் ரோஜர் பின்னி முன்னாள் இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் தந்தை ஆவார். இவர்கள் இருவருமே ரவி சாஸ்திரியுடன் பீர் குடிப்பார்கள் என்றும் ரவி சாஸ்திரி இதன்மூலம் குறிப்பிட்டார்.

shastri

ஏற்கனவே ரவி சாஸ்திரி சாதாரணமாக ஏதாவது புகைப்படத்தினை பகிர்ந்தாலே ரசிகர்கள் அதனை கண்டபடி கலாய்த்து தள்ளுவார்கள். இந்நிலையில் தற்போது தன்னுடன் யார் மது அருந்துவார்கள் என்று வரை அவர் குறிப்பிட்டுள்ளதால் விரைவில் இதுகுறித்த மீம்ஸ்கள் இணையத்தில் அதிகளவு வருவதை நாம் பார்க்கலாம்.

Advertisement