கடற்கரையில் ஓய்வை அனுபவித்த ரவி சாஸ்திரி. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Ravi-1
- Advertisement -

புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ஒருநாள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த விடுமுறை நாளை பயன்படுத்திக்கொள்ள நினைத்த இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆன்டிகுவா நகரிலுள்ள “கொக்கே பே” எனும் சுற்றுலா தளத்திற்கு சென்று ஓய்வை கொண்டாடினர். இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்ட ரவிசாஸ்திரி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நேரம் ஜூஸ் குடிப்பதற்கான நேரம் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் ரவிசாஸ்திரி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காரணம் யாதெனில் மது பிரியரான ரவிசாஸ்திரி குடிப்பதற்காக அங்கு சென்றுள்ளார் மேலும் சிறிது நேரம் கழித்து அவர் படுத்து விடுவார் என்று கிண்டல் செய்தனர். மேலும் சிலர் உங்களது உடைக்கும் உங்களது உடம்பிற்கும் சம்பந்தமே இல்லை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் மேலும் பலர் அவர் மதுபானங்கள் மற்றும் சிகரெட் போன்றவற்றுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு அவரை கேலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement