வீரர்களின் மனைவிகளும் இனிமேல் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார்கள் – ரவி சாஸ்திரி கிண்டல் பேச்சு

Ravi
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியதை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தன. அதிலும் மிடில் ஆர்டர் வீக்னஸ் குறித்து அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி வீரர்கள் இடையே ஒற்றுமையில்லை. கேப்டன் கோலி, ரோகித் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் மற்றும் வரப்போகிறது என்று ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தன.

Rohith

- Advertisement -

இந்நிலையில் இவை அனைத்திற்கும் மேலாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் ரோஹித், கோலி விவகாரத்தை சமாதானப்படுத்தும் சென்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு முன்பாக கேப்டன் கோலி மற்றும் ரவிசாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் வீரர்களின் மனைவிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரவிசாஸ்திரி கூறிய பதில் : முதலில் வீரர்களுக்கு இடையே பிரச்சினை என்றார்கள் அடுத்ததாக மனைவிக்கும் வீரர்களுக்கும் இடையே பிரச்சனை என்றார்கள் இப்போது வீரர்களின் மனைவிகள் இடையே பிரச்சனை என்கிறார்கள். இனிமேல் வீரர்கள் ஆட மாட்டார்கள் அவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவிகள் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார்கள் என்ற வதந்தியை கூட பரப்பி விடுவார்கள் என கிண்டலாக ரவி சாஸ்திரி பதிலளித்தார்.

ravi-koli-3

இந்த பதிலைக் கேட்ட விராட் கோலியும் அந்த கூட்டத்தில் இருந்த பலரும் ரவி சாஸ்திரியின் இந்த பதிலை கேட்டு சிரித்து விட்டனர் அந்தளவுக்கு கிண்டலாக ரவி சாஸ்திரி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement