ரவி சாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட இதுதான் காரணமாம் – பி.சி.சி.ஐ அதிருப்தி

Ravi
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் நான்காவது நாளன்று இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

Shastri

- Advertisement -

மேலும் அவரை தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வீரர்கள் யாருக்காவது ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் ஒருவழியாக வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கடுமையான பயோ பபுளையும் மீறி ரவிசாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணம் என்ன ? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பு தளத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

Shastri

அதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் சில வீரர்கள் ஆகியோர் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் முகக் கவசம் அணியாமல் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டதாலேயே ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Ravi-shastri

யாரிடமும் எந்த தகவலையும் கொடுக்காமல் இதுபோன்று பொது இடத்திற்கு வீரர்களுடன் பயிற்சியாளர் குழு சென்றது தவறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ – யிடம் தங்களது அதிர்ப்தியை தெரிவித்துள்ளது. மேலும் பி.சி.சி.ஐ-யும் இவ்வாறு நடந்து கொண்டதற்காக பயிற்சியாளர்கள் குழு மீதும், இந்திய வீரர்கள் மீதும் கோபப்பட்டு மேலும் பயோ பபுள் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement