இந்த தொடரில் நீ சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கி விடுவோம். இளம்வீரரை நேரடியாக எச்சரித்த – கோலி மற்றும் ரவி

ravi-koli-3
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்திய அணியில் விக்கெட் கீப்பராக டெஸ்ட் மற்றும் டி20 ஒருநாள் என அனைத்திற்கும் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டு வருகிறார்.

Rishab Pant

- Advertisement -

தற்போது நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அதிரடியாக விளையாடும் பண்ட் தனது வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து விரைவில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்து வருகிறார். தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவரும் பண்ட் அணியில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பண்ட் தொடர்பாக கோலி மற்றும் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் : பண்ட் ஒரு திறமையான வீரர் தான் இருப்பினும் அவரது பொறுப்பை உணர்ந்து ஆடவேண்டும். மேலும் அணியின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அந்த சூழ்நிலைக்கேற்ப அவர் ரன்களை குவிக்க வேண்டும்.

Pant

அவருடைய தவறான ஷாட் தேர்வின் மூலம் அவர் விரைவில் ஆட்டமிழக்க அதனை மாற்றிக் கொண்டு சிறப்பாக இருந்தால் மட்டுமே அவருடைய இடம் அணியில் நீடிக்கும் இல்லையென்றால் இளம் வீரர்கள் மாற்று வீரராக அணியில் சேர்க்கப் பட வாய்ப்பு உள்ளது என்று பண்ட்டை நேரடியாக கோலி மற்றும் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement