தோனி பற்றி உங்களுக்கு என்ன தெரியும் இப்போது கூட அவரால் இதனை செய்ய முடியும் – ரெய்னா நம்பிக்கை

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடைசியாக அவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Raina

- Advertisement -

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விரும்புவதாக அவர் நேற்று பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் சில விடயங்களை அவர் வெளிப்படையாக பேசினார். அதில் அவர் தோனியை பற்றி குறிப்பிட்டதாவது : நான் இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கிய விளையாட ஆசைப்படுகிறேன்.

மேலும் அந்த இடத்தில் விளையாட நான் தயாராக இருப்பதாகவும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு தோனி குறித்து பேசிய அவர் : தோனி அணியில் இருப்பது அவசியம் ஏனெனில் இளம் வீரர்கள் தடுமாறும் போது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் அவர் சிறந்தவர்.

Dhoni

மேலும் தோனியால் எண்ண முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் இப்பொழுதும் சிறந்த உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் இப்போது உலகின் பெஸ்ட் பினிஷர் என்றே நான் கூறுவேன். அவரால் இப்பொழுதுகூட போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் நிறையவே உள்ளது. மேலும் இந்திய அணியின் சொத்து தோனி தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement