அழுதுகொண்டிருந்த என்னை தேற்றி என்னை சிறப்பாக ஆடவைத்தது. அனுஷ்கா மற்றும் கோலிதான் – ராகுல் உருக்கம்

Rahul
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

Ind-vs-Nz

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான ராகுல், கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : நான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சமயம் அது அப்பொழுது நான் அந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. இதனால் மிக மோசமான மனநிலையில் ஓய்வறையில் அழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்க்க வந்த அனுஷ்கா சர்மா உடனே நீ என்னுடன் வா என்று அழைத்தார்.

மேலும் நீ இப்போது கிரிக்கெட்டைப் பற்றி யோசிக்க வேண்டாம். நீ நான் மற்றும் கோலி ஆகிய மூன்று பேரும் இப்போது வெளியே செல்லலாம். மற்றும் விடயங்களை அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என்று நீ என்னுடன் வா என்று அழைத்துச் சென்றார். நான் கோலி அனுஷ்கா மூவரும் வெளியே சென்று விட்டு வந்தோம். அப்போது தன் படங்களின் தோல்வி அடைந்த கதையை அனுஷ்கா சர்மா கூறி மீண்டும் அதை எப்படி அதிலிருந்து வந்தேன் என்பது போல எனக்கு ஊக்கம் அளித்தார்.

anushka

அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. மேலும் கோலியும் அவரது ஆலோசனை எனக்கு வழங்கினார். அனுஷ்கா எப்பொழுதும் என்னுடைய தோழியாக பல நல்ல விடயங்களுக்கு கூறியுள்ளார். அவர்கள் இருவரும் கொடுத்த அறிவுரை எங்கு பெரிய அளவில் மாற்றங்களை கொடுத்துள்ளது.

Rahul

இந்த உலகக் கோப்பை தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை. ஆனாலும் மீண்டும் நான் சிறப்பாக ஆடுவேன் என்று நம்பி கோலி எனக்கு வாய்ப்பளித்தார். அதன் மூலம் தற்போது நான் சிறப்பாக விளையாடி சதம் அடித்து உள்ளேன். வரும் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடுவேன் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement