டி20 உலகக்கோப்பை குறித்து சிந்திக்கவில்லை. என் குறிக்கோள் இது மட்டுமே – தொடர்நாயகன் ராகுல் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Rahul

- Advertisement -

இந்த தொடர் முழுவதும் ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் மொத்தம் 224 ரன்களை அடித்து தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததால் அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடர் முழுவதும் பண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் ராகுலே விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப்போட்டி முடிந்து வெற்றி குறித்தும் தனது செயல்பாடு குறித்தும் பேசிய ராகுல் கூறியதாவது :
இந்திய அணி 5-0 என வெற்றி பெற்ற பின் நான் இங்கு நிற்பது சந்தோசம் அளிக்கிறது. நாங்கள் மிகவும் அற்புதமான வகையில் இப்போது தொடர்ந்து டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இந்த தொடரில் எங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினோம். வெற்றியை நழுவ விடாமல் கைப்பற்றியது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

வெற்றிப் பழக்கத்தை நாங்கள் வளர்த்துள்ளோம் என்று நினைக்கிறேன். வெற்றிக்கான வித்தியாசமான வழிகளை கண்டுபிடிப்பது எங்களுடைய பொறுப்பாகும். நான் இப்போது டி20 உலக கோப்பை பற்றி நான் சிந்திக்கவில்லை. இதேபோன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதை மட்டும் நினைத்து விளையாடி வருகிறேன் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement