இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பாக பெற அதிகபட்சமாக குஷால் பெரேரா 34 ரன்கள் அடித்தார்.
அதன்பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்க வீரர் ராகுல் மற்றும் தவானின் சிறப்பான துவக்கத்தால் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது அதன் பிறகு ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது வீரராக ஐயர் களம் இறங்கினார். தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கோலியும் ஐயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இறுதிகட்டத்தில் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
போட்டி முடிந்து பேசிய இந்திய அணியில் துவக்க வீரர் ராகுல் இந்த போட்டி குறித்து கூறுகையில் : இது குறைந்த இலக்கு கொண்ட போட்டியாகும் என்னுடைய திட்டத்தில் நான் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பேட்டிங் செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
170 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்த மைதானத்தில் சவாலாக இருந்திருக்கும். ஆனால் நமது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களை கட்டுப்படுத்தினர். தற்போது நான் ரன்களை சேகரித்து வருகிறேன் எப்படி ஒரு வலுவான இன்னிங்க்ஸை கட்டமைக்க வேண்டும் என்பதையும் எனது ஆட்டத்தில் வெளிப்படுத்துவதற்காக சிறப்பாக விளையாடி வருகிறேன். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது சந்தோஷமாக இருக்கிறது.
மொத்தத்தில் அணியை வெற்றி வெற்றிக்கு அழைத்துச் செல்வது மகிழ்ச்சி. தவானுடன் துவக்க
வீரராக கரியரை தவானுடன் இணைந்து நான் துவக்க வீரராக களம் இறங்கி இருப்பதால் ரோகித் தவான் என யாராக இருந்தாலும் துவக்க வீரராக எனக்கு எந்த பிரச்சனை இல்லை என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.