நடுக்கடலில் கோலி, அனுஷ்கா, ராகுல் மற்றும் அஷ்வின் வைரலாகும் -கே.எல் ராகுலின் பதிவு

Rahul
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப் படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால் அங்கும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிந்து விட்டதால் ஒரு நாள் இந்திய அணிக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் கோலி, அனுஷ்கா, ராகுல், அஸ்வின் மற்றும் அகர்வால் ஆகியோர் ஆண்டிகுவா நகரில் உள்ள கடற்கரையில் படகு சவாரி செய்துள்ளனர்.

- Advertisement -

அதனை இந்திய அணி வீரரான ராகுல் விடியோவாக பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகுலின் இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement