சேலஞ்ச் செய்து மிரட்டல் விட்ட நியூசி வீரர். ஏப்ரலில் பாத்துக்குறேன் என்று கூலாக பதிலளித்த ராகுல் – விவரம் இதோ

Neesham
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது முடிவடைந்தது. இந்த தொடரை நியூசிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ஜிம்மி நீஷம் ராகுலுடன் ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் “பேப்பர் சீசர் ராக்” என்று அந்த புகைப்படத்துக்கு தலைப்பினை வைத்து சேலஞ்ச் செய்துள்ளார்.

- Advertisement -

ராகுல் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்த உள்ளார். அந்த அணியில் ஜிம்மி நீசமும் இடம் பெற்றிருந்ததால் இந்த சவாலை ஏற்று ராகுல் பதிலளித்துள்ளார். மேலும் சில ரன்களை நீங்கள் ஏப்ரல் மாதம் சேமிக்க வேண்டும் என்றும் அவர் ராகுலுக்கு அவர் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். இந்த சவாலுக்கு பதில் அளித்த ராகுல் இதை ஏப்ரல் மாதம் பார்த்துக் கொள்வோம் என்று பதிவிட்டார்.

பஞ்சாப் அணி 50 லட்ச ரூபாய் ஏலத்திற்கு ஜிம்மி நீஷம்மை இந்த ஆண்டு ஏலத்தில் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் தலைமையில் அவர் விளையாட இருப்பதால் இந்த செல்லமான பதிவை அவர்கள் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தொடரில் கீப்பராகவும் ராகுல் செயல்பட உள்ளதால் ரன்களை சேமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement