ராகுலின் சென்சுரி செல்லபிரேஷன் எங்கிருந்து வந்தது. எதை உணர்த்துகிறது ? தெரியுமா ? – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Rahul

- Advertisement -

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் சதம் அடித்து பிறகு தனது இரு காதுகளிலும் கை வைத்து மூடி சதத்தை கொண்டாடினார். அவரது இந்த வித்தியாசமான சென்சுரி செலபிரேஷன் காரணம் என்ன ? அதுமாதிரியான செலிப்ரேஷன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

rahul

அதன்படி லேசிஸ்டர் சிட்டி எனும் கால்பந்து அணிக்காக விளையாடி வரும் அயோசி பிரைஸ் என்ற வீரர் இடமிருந்து இந்த செலிப்ரேஷன் வந்துள்ளதாக தெரிகிறது. தனது அணிக்காக கோல் அடித்த பிறகு தனது இரு காதுகளிலும் கைவைத்து வெளிப்புறத்தில் இருப்பவர்கள் பற்றிய சிந்தனை எனக்கு கிடையாது என் ஆட்டத்தில் மட்டுமே குறிக்கோள் என்று அவர் அதனை செய்வார்.

அதேபோன்று தற்போது ராகுல் தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களும், தவறாகப் பேசுபவர்களை பற்றிய கவலை எனக்கு இல்லை, நீங்கள் கூறுவது எதுவும் என் காதில் விழவில்லை நான் என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறேன் என்பது போல மைதானத்தில் இந்த சென்சுரி செலபிரேஷன் செய்தார் அவரது இந்த செலபிரேஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement