ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்திய டிராவிட். வீரர்களிடமும் பேச்சுவார்த்தை – விவரம் இதோ

Dravid
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jadeja

- Advertisement -

இதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுதினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அந்த மைதானத்தில் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சந்தித்தார்.

தற்போது ராகுல் டிராவிட் அவர்களை சந்தித்த புகைப்படங்கள் பி.சி.சி.ஐ ட்விட்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை டிராவிட் நேரில் சந்திக்க காரணம் யாதெனில் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான டிராவிட் பெங்களூரைச் சேர்ந்தவர் எனவே அங்கு இருந்த வீரர்களை அவர் சந்தித்தார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சிகள் தற்போது பெங்களுருவில் நடைபெற்று வருவதால் அங்கு டிராவிட் சென்றார்.

மேலும் இந்திய அணி வீரர்களுடன் தனது ஆலோசனையை பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடன் கலந்துரையாடவும் மாற்று ரவி சாஸ்திரியுடன் சிறிதுநேரம் உரையாட டிராவிட் சென்றது குறிப்பிடத்தக்கது. டிராவிட் தலைமையில்தான் க்ருனால் பாண்டியா, மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சஹர் போன்ற வீரர்கள் பயிற்சி பெற்று இந்திய அணியில் தற்போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement