டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாமல் தவித்துவரும் ராகுல் எடுத்த அதிரடி முடிவு – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.

Ind-1

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் துவக்க வீரராக ராகுல் களம் இறங்கினார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்த கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். ஆனால் இந்த தொடரிலும் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் 44 ரன்களை அடித்து அதன் பிறகு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கோலியின் நம்பிக்கையை வீணடித்தார்.

தனது டெஸ்ட் போட்டிகளின் ஆரம்பத்தில் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 சராசரி வைத்திருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் 15 போட்டிகளில் தொடர்ந்து அவர் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது சராசரி தற்போது 34 ஆக குறைந்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்றாலும் ராகுலால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று கோலி நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார்.

rahul

இந்நிலையில் இந்த தொடரில் ராகுல் சரியாக ஆடாததால் அடுத்த தொடரில் அவரது இடத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

The irony

A post shared by KL Rahul???? (@rahulkl) on

நோட் சோஷியல் மீடியா என்ற டீசர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதன்மூலம் அவர் தெரிவிக்க வருவது யாதெனில் இனிமேல் எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் சமூக வலைதளங்கள் மற்றும் தன் கவனத்தை சிதற வைக்கும் பொழுதுபோக்கு ஆகியவற்றை தவிர்க்க போவதாக இந்த பதிவின் மூலம் ராகுல் தெரிவிப்பது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement