- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிறந்தநாளை கொண்டாடாமல் ராகுல் செய்த செயல். உண்மையிலேயே பெரிய மனசுதான் – ரசிகர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் நேற்று முன்தினம் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது பெண் தோழியான அதியா ஷெட்டியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து அமர்க்களம் படுத்தினார். ஒருபுறம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க ராகுலோ பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடாமல் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு மாதமாக வீட்டில் முடங்கி இருக்கும் ராகுல் தனது பிறந்தநாள் அன்று அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்காக உதவியை செய்ய முன்வந்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகியவற்றை ஏலம் விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை மொத்தமாக அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த ஏலத்தில் அவர் விட இருக்கும் பொருட்கள் குறித்து பேசிய போது அவர் குறிப்பிட்டதாவது : நான் எனது கிரிக்கெட் பேட், கிளவுஸ், ஹெல்மெட் மற்றும் சில ஜெர்சிக்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன்.அதில் வரும் நிதியினை அவேர் அறக்கட்டளைக்கு முழுவதுமாக கொடுக்க உள்ளேன்.

நான் செய்யும் இந்த உதவி மூலம் அந்த அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்கு உதவி கிடைக்கும். இதை செய்ய நல்ல நாள் வேறு ஒன்றும் இருக்க முடியாது அதனால் இந்த ஏலத்தில் பங்கேற்று எனக்கும் அந்த குழந்தைகளுக்கும் அன்பு காட்டுங்கள். இந்த நேரத்தில் பக்கபலமாக இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்வதேச அளவில் காரணமாக 24 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இன்னும் பலரும் தீவிர சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு, மாநில அரசு என அரசாங்கம் நிதி உதவிகளைப் பெற்று வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்கள் மற்றும் நிர்வாகம் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வரும் நிலையில் ராகுல் தானாக முன்வந்து தனது கிரிக்கெட் கிட்டை ஏலத்தில் விட்டு குழந்தைகளுக்கு உதவ நினைக்கும் ராகுலின் இந்த செயல் குறித்து ரசிகர்கள் அனைவரும் வரவேற்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by