நான் கூறியபடி இந்த இரண்டு வீரர்களும் இன்றைய போட்டியில் நிச்சயம் ஆடுவார்கள் – கோலி அதிரடி

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bumrah-1

இந்நிலையில் இன்று துவங்க இருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தேர்வு எப்படி இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியை கோலி தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது. அதன்படி கடந்த போட்டியில் ஆடிய அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதனை கணக்கில் கொண்டு இந்திய அணியை மாற்றமின்றி அப்படியே கொண்டு செல்ல கோலி திட்டமிட்டிருப்பதாகவும், அப்படி மாற்றம் செய்ய நினைத்தால் ஷமிக்குப் பதிலாக உமேஷ்யாதவ் இந்த போட்டியில் ஆடுவார் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. மேலும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாட விட்டாலும் சரி ராகுல் மற்றும் அகர்வாலுக்கு துவக்க வீரர்களாக நான் வாய்ப் அளிப்பேன் என்று கூறியபடி கோலி இன்றைய போட்டியிலும் அவர்களை விளையாட வாய்ப்பு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளிப்பார்கள் என்று கோலி உறுதியாக நம்புவதால் அவர்களுக்கு தொடர்ந்து கோலி வாய்ப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடிக்கடி அணியில் மாற்றம் செய்யும் கோலி இன்றைய போட்டியில் என்ன செய்யபோகிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement