கண்டிப்பா இன்னைக்கு ரஹானே சதம் அடிப்பாராம் – அட என்ன இது புதுசா இருக்கு

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனே மைதானத்தில் துவங்கியது.

Kohli

- Advertisement -

அதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளில் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி தற்போது 63 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி தற்போதுவரை 3 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. கோலி 86 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் கோலி சதம் அடிப்பார் என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய ரசிகர்கள் அதைவிட ரஹானே இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று தங்களது உறுதியான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர்.

rahane

அதன் காரணம் யாதெனில் இதுவரை இந்திய வீரர்களில் சிலர் தங்களது குழந்தை பிறந்தபின் விளையாடும் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளனர். அதில் ரோகித் சர்மாவை குறிப்பிட்டுச் சொல்லலாம் அதனை போன்றே கடந்த சில நாட்களுக்கு முன் ரஹானே தனது பெண் குழந்தைக்கு தந்தையானார். எனவே தனது குழந்தை பிறந்த பிறகு இதுவே அவருடைய முதல் போட்டி ஆகும் எனவே இந்த போட்டியில் அவர் சதம் அடிப்பது உறுதி என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement