கிரிக்கெட் போட்டிகளில் இனிமே விக்கெட் விழுந்த கட்டிபுடிச்சி கொண்டாட கூடாது. அதுக்கு பதிலா இதை செய்யலாம் – ரஹானே பேட்டி

- Advertisement -

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Rahane 1

அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது :கரோனா வைரஸ் தாக்கம் ஒருவேளை முடிந்து விட்டால் மீண்டும் ஆடுகளத்திற்கு வந்து ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும். வீரர்கள் மீண்டும் தயாராக கிட்டத்தட்ட குறைந்தது 4 வாரங்கள் ஆவது தேவைப்படும். குறிப்பாக இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே போட்டிகள் தொடங்கப்படவேண்டும்.

- Advertisement -

வீட்டில் நான் தினமும் பயிற்சி செய்து வருகிறேன். நான் சிறு வயதிலிருந்தே ஜுடோவில் எனது திறனை வளர்த்துக் கொண்டேன். அதனால் அதனையும் செய்து வருகிறேன். வீட்டில் என் மனைவிக்கு சமையலில் உதவுகிறேன். எனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறேன்.
மறுபடியும் கிரிக்கெட் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியாது.

Rahane

ஆனால் இனி பழைய முறைப்படி கிரிக்கெட் இருக்காது என்று நினைக்கிறேன். விக்கெட் விழுந்துவிட்டால் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து தான் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்.
முந்தைய காலகட்டத்தில் விகெட் விழ்ந்தால் வீரர்கள் எல்லாம் தங்களது இடத்தில் நின்று கொண்டே உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

- Advertisement -

இனி அந்த முறை நடைமுறைக்கு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் என்று அஜின்கியா ரஹானே. இந்திய அணிக்காக 2011 ஆம் ஆண்டு அறிமுகமான ரஹானே இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 போட்டியிலும் ஒருநாள் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

rahane2

மேலும் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறார். நீண்ட காலமாக ஆடிவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தற்போது அவர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement